Showing posts with label மதுரை. Show all posts
Showing posts with label மதுரை. Show all posts

Thursday, September 08, 2016

On Thursday, September 08, 2016 by Unknown in    

காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி தலைவரும், பாஜக வின் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஈஸ்வரப்பா, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்ப்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக மக்களுக்கு கடும் மன வேதனை அளித்துள்ளதாகவும், தமிழகத்தின் தண்ணீர் தேவை அடுத்த சம்பா சாகுபடிக்கு மட்டும் தான், ஆனால் கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் தெரிவித்த அவர், உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

மேலும் காவேரி நீர் பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்து விட்டதாகவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து இன்று மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Wednesday, September 07, 2016

On Wednesday, September 07, 2016 by Unknown in    

விவசாயிகள் பஞ்ச பட்டினியில் சாவதை வேடிக்கை பாா்க்க முடியாதுை
காவிரி ,முல்லை பெரியாறு ,சிறுவாணி என பிரச்சனைகள் தொடா்கிறது..உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும்
தோல்வியை வெற்றியாக்க கூடிய தொண்டா்களும் தலைவர்களும் எங்கள் இயக்கத்தில் இருக்கிறாா்கள் ...ஒவ்வொரு பஞ்சாயத்து அமைப்புகளிடம் தமாகா இரண்டாமிடத்தில் உள்ளது
கூட்டணியை பொறுத்தமட்டில் தோ்தல் தேதி அறவித்த பிறகே முடிவு
‬அறிவித்த பிறகே முடிவு மதுரையில் த.மா.கா தலை வர் ஜி.கே .வாசன்.பேட்டி

Thursday, October 08, 2015

On Thursday, October 08, 2015 by Unknown in ,    



மதுரை:  தனியார் பேருந்தின் அதீத வேகத்தினால் 3 அப்பாவி உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என காமராஜர் பல்கலை மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
தேனி செல்லும் மெயின்ரோட்டில் காமராசர் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. முகப்பு நுழைவு வாயிலை ஒட்டினாற்போல் அமைந்திருக்கும் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பேய் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. வாகனம் மோதி இதுவரை பல மாணவர்கள் இறந்துள்ளனர். அங்கு ஒரு பாலம் போட்டு மாணவர்கள் நிம்மதியாக சென்று வர வழி ஏற்படுத்த வேண்டுமென்று மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரி வருகிறார்கள்.  ஆனால், பல்கலை நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பி.பீ.குளத்தில் உள்ள லேடி டோக் மகளிர் கல்லூரியில் செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் கங்காதேவியும், கொடைக்கானலை சேர்ந்த  ரபியத்துல் பசிரியா என்பவரும் 3–ம் ஆண்டு படித்து வந்தனர். 
இன்று காலை  காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வந்த ரபியத்துல் பசிரியா,  தோழி கங்காதேவிக்காக பல்கலைகழக பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது கங்காதேவி தனது தந்தை அன்பழகனுடன் டூவீலரில் அங்கு வந்தார். அங்கு மூவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக சென்ற தனியார் பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில்  டூவீலர் மீது பலமாக மோதியது. இதில் அன்பழகன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தூக்கி வீசப்பட்ட கங்காதேவியும் ரபியத்துல் பசிரியாவும் படுகாயமடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவிகள் 2 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரபியத்துல் பசிரியா பரிதாபமாக இறந்தார். கங்காதேவியும் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி இறந்தார்
இதுகுறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து,  தப்பியோடிய தனியார் பஸ் டிரைவர் ஜெயராமை தேடி வருகின்றனர்.
மாணவர்களின் கோரிக்கை புறந்தள்ளப்பட்டு, அதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் 3 உயிர்கள் பலியான சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Monday, September 21, 2015

On Monday, September 21, 2015 by Unknown in ,    



ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் சனிக்கிழமை சர்வதேச கடற்கரையோர துப்புரவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்வன்று, உலகம் முழுவதும் தனனார்வ தொண்டர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயல்பாட்டில் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு, இந்நிகழ்வு செப்டம்பர் 19 சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை துப்புரவு நாள் உலகம் முழுவதும் உள்ள கடற்கரைகள் கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளின் முன்னேற்றத்திற்காக அர்பணிக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ நிகழ்வாக தொடர்ந்து 29 ஆண்டுகளாக நடந்து வருகிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கடல் மற்றும் கடலோர ஆய்வுத் துறையின் சார்பாக நடந்த நிகழ்வில் தூய்மைப்படுத்தும் தளமாக மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டன. இக்கடற்கரை சமீப ஆண்டுகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இந்நிகழ்வு முனைவர்        lhd;Ip  ... தலைமை வன பாதுகாவலர் மற்றும் இயக்குனர் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை இராமநாதபுரம் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முனைவர் மு. ஆனந்த் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரையாற்றினார். முனைவர்  lhd;Ip mth;fs; fly;fs; kw;Wk; gpw ePh;epiyfs; khRgLtJ kdpjdpd; fyhr;rhu eltbf;iffs; vd;gij Rl;bf;fhl;baJld; mwpTg;G+h;tkhd mwptpay; rhh;e;j fyhr;rhu kd khw;wj;jpd; %yNk Rw;Wr;R+oiy Ngzpg;ghJfhj;jpl KbAk; vd;gij jkJ ciuapy; topAWj;jpdhh;.              
      eh]pah Nky;epiyg;gs;spapd; jhshsh; jpU. KfkJ ,g;uhk;\h NgRifapy; ehk; ,aw;ifia khRgLj;jhky; J}a;ikahf itj;Jf;nfhs;tjd; %yNk ,aw;ifahdJ ek; cly;epiyia MNuhf;fpakhf itj;Jf;nfhs;s toptFf;Fk; vd;gij vLj;Jiuj;jhh;.அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் vஸ் ரவிக்குமார் அவர்கள் Nkz;ikkpF Kidth; V.gp.NI. mg;Jy;fyhkpd; $w;iw cz;ikahf;Fk; tpjkhf kdpj rKjhaj;ijr;rhh;e;j midtUk; ,aw;ifia J}a;ikahf itj;Jf;nfhs;s ghLglNtz;Lk; vd;gij topAWj;jpdhh;. Kidth; rp.K. ,uhkf;fpUl;bzd நன்றியுரையாற்றினார் fy;tp fy;Y}hp khzth;fs; kw;Wk; nghJkf;fs; vd சுமார் 200 தன்னார்வ தொண்டர்கள் சீனியப்பா தர்கா கடற்கரையை தூய்மைப்படுத்தினர். துப்புரவு தரவு மூலமாக கடல் மற்றும் கரை சார்ந்த குப்பைகளின் அளவு தெரியவந்தன. கரையோரக் குப்பைகளில் பொதுவாக காணப்பட்டவை பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாஸ்டிக் பேப்பர்கள் தண்ணீர் பாக்கெட்டுகள் கண்ணாடி பாட்டில்கள் காகித கப்கள் சிகரெட் துண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் மற்றும் இன்ன பிற. நம் கடற்கரைகளில் உள்ள பெரும்பாலான  குப்பைகள் மனித நடவடிக்கைகளாலேயே ஏற்படுகின்றன. இக்குப்பைகள் புயல் காற்று மற்றும் சிற்றோடைகள் மூலமாக கடலுக்குப் பயணமாகி கலக்கி்ன்றன.   இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக்கலக்கி்ன்றன.  இந்நிகழ்வில் தனனார்வத் தொண்டர்களால் எடுக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் igfs; kw;Wk; gpsh];bf; Jz;Lfs; 37 rjtPjKk; gpsh];bf பாட்டில்கள் 32 சதவிகிதமும் கண்ணாடி பாட்டில்கள் 19 சதவிகிதமும் மற்றும் இதர குப்பைகளான சிகரெட் துண்டுகள் பாட்டில் மூடிகள் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் வலைகள் போனறவை சதவிகிதத்தின் மிச்சத்தைப் பூர்த்தி செய்தன. மக்கும் பொருட்களை விட மக்காத பொருட்களே கடலோர குப்பைகளில் அதிகளவு காணப்பட்டன. மாவட்ட நிர்வாகம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சில கடுமையான சட்டங்களையும் விதிகளையும் விதிப்பதன் மூலம் இங்கு சேரும் குப்பைகளின் அளவைக் குறைக்கலாம்