Showing posts with label Salem. Show all posts
Showing posts with label Salem. Show all posts
Saturday, July 19, 2014
சென்னையிலிருந்து குவைத்திற்கு கடத்த முயன்ற ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் மற்றும் மெத்தாபெடாமைன் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். ராஜேந்திரன் ஷேசாத்திரி என்பரின் பையை சோதனையிட்டபோது, அவரது பையில் 1.1 கிலோ ஹெராயினும், 1.02 கிலோ மெத்தாபெடாமைனும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராஜேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் என்பதும், இதில் தொடர்புடைய மேலும் 3 பேர் விமான நிலையத்திற்கு வெளியில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வெளியில் இருந்த முகமது இப்ராகிம், விஜயகுமார், முகமது ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரு நபர், போதைப் பொருட்களை குவைத்தில் கொண்டு சேர்க்கும்படி கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். போதைப் பொருளை கொடுத்து அனுப்பிய கேரள நபர் மற்றும் குவைத்தில் உள்ள கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் அனைத்திந்திய அறவாணர் சாதனை விருதுக்குத் தேர்வுமுனைவர் க.தமிழமல்லன் தனித்தமிழ் இயக்கத்தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் அனைத்திந்திய அறவாணர் சாதனை விருதுக்குத் த...
-
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை பெற்றதை யொட்டியும்,ம...
-
திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதால், ஊத்துக்குளி ரோட்டில் நாளை(சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
19 ஆம் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் – (பதிவறிக்கை (தமிழ்) - 31.௦3.2௦17 நிகழ்ச்சி நிரல் எம்.ஏ.எம் . பொ...
-
திற்பரப்பு அருவியில் குளிக்க திரண்டுள்ள பெண்கள். திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள்...
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தல வரலாறு கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றெல்லாம் அழைக்கப்படும் சமயபுரம் ஸ்ரீமா...