Showing posts with label திருப்பூர். Show all posts
Showing posts with label திருப்பூர். Show all posts

Thursday, December 15, 2016

On Thursday, December 15, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை நகரில் போக்குவரத்து நிறைந்த பழைய பஸ் நிலையம் பகுதியில் இருந்து சத்திரம் வீதிக்கு செல்லும் இடத்தில் பொள்ளாச்சி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி, சாலையில் ஓடும் அவல நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். சாக்கடை கால்வாய் அடைப்பை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

On Thursday, December 15, 2016 by Unknown in    

திருப்பூர்,இந்தியாவில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி ஆதரவோடு இருக்கிறார்கள் என்று திருப்பூரில் தா.பாண்டியன் கூறினார்.கருத்தரங்கம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் யுகப்புரட்சியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் திருப்பூர் மங்கலம் ரோடு கே.ஆர்.சி. சிட்டி சென்டர் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுவுடைமை குறித்து பேசினார்கள்.கருத்தரங்கம் முடிந்ததும் தா.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:–பயிர்கள் கருகி விட்டது

தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் கிராமம், நகரங்களில் குடிநீருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அனைத்தும் கருகி விட்டன. எனவே கையில் இருந்ததையும் இழந்ததன் காரணமாக கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். எனவே விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டிய பொறுப்பு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.வெள்ளத்தால் சேதம் ஏற்பட்டாலும், பயிர்கள் கருகி போனாலும் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்புகிறோம் என்பார்கள். அவர்கள் பார்வையிட்டு சென்று விடுவாடுவார்கள். அதன்பிறகு அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள். அதில் எவ்வளவு நிவாரணம் வந்தது என்பதெல்லாம் தெரியாது. இது வாடிக்கையாகி விட்டது. எனவே மத்திய அரசு இந்த குழுக்களை நியமிப்பது என வாடிக்கையான மழுப்பல் வேலைகளை செய்யாமல், வறட்சியை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், மாநில அரசும் முழு மூச்சாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.விவசாய கடன்கள்

முதல் நடவடிக்கையாக விவசாயிகளிடம் ஒரு வருடத்துக்கு விவசாய கடன்களை வசூலிக்க கூடாது. இதற்கான அறிவிப்பை அரசு உடனே வெளியிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் இயக்கங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி உடனடியாக தொடங்கும்.கருப்பு பணம்

கருப்பு பணம் வேட்டையாடுவதில் பிரதமர் மோடி இறங்கி உள்ளார். இந்தியாவில் மக்கள் படும் துயரத்தை பார்த்தால் அவர் அறிவித்த அறிவிப்பின் லட்சியத்தை அவர் அடையப்போவதில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். களில் கிடைப்பதில்லை. ஆனால், தனியாரிடம் ரூ.100 கோடி, ரூ.200 கோடி பிடிபட்டு இருக்கிறது என்றால் அரசாங்கத்தால் அச்சிடப்படும் பணம், ரிசர்வ் வங்கியால் வினியோகிக்கப்படும் பணம் எப்படி தனியாருக்கு கிடைத்தது என்பதை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சி அரவணைப்போடு, ஆதரவோடு இருக்கிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. கருப்பு பணம் வைத்து இருப்பவர்களை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் மக்களை இப்படி வாட்டி வதைக்கக்கூடாது.ஒத்துழைக்க வேண்டும்

மத்திய அரசு என்பது ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார புகுத்துதலை மாநில அரசுகளிடம் செய்து வருகிறது. மாநில அரசின் உரிமைகளை பாதுகாப்பதில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

On Thursday, December 15, 2016 by Unknown in    

குண்டடம் குண்டடம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன.சூறாவளி காற்று

சென்னையில் நேற்று முன்தினம் கரையை கடந்த வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது. அதே நேரம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. அதேபோல் குண்டடம் பகுதியிலும் பனித்துளிகளைப் போன்ற சாரல் பெய்தது. அப்போது பயங்கர சூறாவளிக்காற்று வீசியது.இந்தக் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேட்டுக்கடை, முத்துக்கவுண்டம்பாளையம், சந்திராபுரம், நந்தவனம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது கதிர் தள்ளிய நிலையில் இருந்த மக்காச் சோளப்பயிர்கள் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தது மட்டுமின்றி இந்த போகமே வீணாகிப் போனதாக கவலை தெரிவிக்கின்றனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. மின்கம்பங்கள் சாய்ந்தன.இது குறித்து தும்பலப்பட்டியை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன் கூறியதாவது:–இழப்பீடு வழங்க வேண்டும்

இந்த போகத்தில் 2 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்திருந்தேன். மழை பொய்த்துப் போய் ஓரளவுதான் விளைந்திருந்தது. இந்த நிலையில் சூறாவளிக்காற்றால் மொத்த மக்காச்சோள பயிரும் சாய்ந்து விட்டன. இதனால் சுமார் ரூ.1.20 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டடம் பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மக்காச்சோளம் சாய்ந்து விட்டன.

On Thursday, December 15, 2016 by Unknown in    

முத்தூர், நத்தக்காடையூரில் இருந்து பழையகோட்டை ஊராட்சி புதுவெங்கரையாம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையம் செல்வதற்கு தார்ச்சாலை உள்ளது. இந்த தார்ச்சாலையின் குறுக்கே நொய்யல் ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஒரு தரைப்பாலம் சேதமடைந்த நிலையில் இரண்டு புறமும் தடுப்பு சுவர் இன்றி உள்ளது. இதனால் இந்த பாலம் வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த தரைப்பாலம் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் பலத்த மழை பெய்தால் ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் இந்த தரைப்பாலத்தை மூழ்கிக்கொண்டு மேலே செல்லும். அப்போது இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். அதற்கு மாற்றாக நத்தக்காடையூரில் இருந்து முத்தூர் சென்று அங்கிருந்து தாண்டாம்பாளையம் செல்ல வேண்டியுள்ளது. எனவே நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை சீரமைத்தும், பாலத்தின் இரண்டு புறமும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

On Thursday, December 15, 2016 by Unknown in    


கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குடியிருந்து கல் உடைக்கும் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வறுமையில் இருக்கும் இந்த தம்பதியினருக்கு குழந்தையை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து தம்பதியினருக்கு தெரிந்த ஒரு நபர் மூலம் கரூரை சேர்ந்த குழந்தையில்லாத மற்றொரு தம்பதிக்கு, குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு வந்தது. இந்த தகவலை அடுத்து குழந்தையின் பெற்றோரையும், குழந்தையை விலைக்கு தத்தெடுத்ததாக கூறப்படும் தம்பதியினரையும் அழைத்து அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், வறுமையின் காரணமாக தெரிந்த நபர் மூலம் கரூரில் உள்ள ஒரு தம்பதிக்கு குழந்தையை கொடுத்ததாகவும், தற்போது குழந்தையை தாங்களே வளர்க்க தயாராக இருப்பதாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்கும் விதமாக, இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அங்குள்ள அதிகாரிகள் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்று திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்

On Thursday, December 15, 2016 by Unknown in    


திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் ஒப்பந்ததாரராக வேலை செய்து வருகிறார். இவருக்கு அவினாசி ரோட்டில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியின் எஸ்எஸ்ஐ கிளையில் சேமிப்பு கணக்கு உள்ளது. இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை ஜீவானந்தத்தின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அப்போது எதிர்முனையில் பேசிய பெண் “ பாங்க் ஆப் பரோடவில் இருந்து பேசுவதாகவும் உங்களுடைய ஏ.டி.எம். எண் காலாவதியாகி விட்டதாகவும், ஏ.டி.எம். கார்டு எண்ணின் கடைசி 4 இலக்க எண்ணை தெரிவிக்குமாறு உள்ளார்.

இதை நம்பி ஜீவானந்தமும் அந்த பெண்ணிடம் 4 இலக்க எண்ணை கூறி விட்டார். அந்த பெண் செல்போன் இணைப்பை துண்டித்த 10 நிமிடத்தில் ஜீவானந்தத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்து 500 பணம் குறைந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவானந்தம் இதுதொடர்பாக வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்பது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

மேலும் ஜீவானந்தத்தின் ஏ.டி.எம். கார்டு எண்ணை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் அதை பயன்படுத்தி அவருடைய வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடி செய்து அந்த பணம் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கியதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஜீவானந்தம் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுடைய செல்போனுக்கு வரும் அழைப்புகளில் எதிர்முனையில் பேசும் நபர்கள் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஏ.டி.எம். எண்ணை வாங்கி வங்கி கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று போலீசார் அந்த செய்தி குறிப்பில் கூறி உள்ளனர்

On Thursday, December 15, 2016 by Unknown in    

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பணத்தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. வங்கியில் செல்லாத நோட்டுகளைத்தான் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிகமாக செலுத்தி வருகிறார்கள். வங்கியில் பெற்றுச்செல்லும், புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகள் மீண்டும் வங்கிக்கு வருவதில்லை. இதனால் வங்கி நிர்வாகம் தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை வழங்க முடியாமல் தவித்து வருகின்றன.

அதே நேரம் திருப்பூரில் உள்ள வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியில் இருந்து போதிய அளவு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வங்கிகளில் தினமும் வரும் பணத்தை பொறுத்து வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கி, ரூ.4 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை வினியோகம் செய்து வருகின்றன.

வங்கிகளில் நீண்ட வரிசை

இதன்காரணமாக தினமும் வங்கிகள் முன்பு காலை 7 மணி முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கி விடுகின்றனர். காலை 10 மணிக்கு வங்கி திறக்கும் நேரத்தில் ஒரு வங்கியில் குறைந்தது 300 முதல் 500 பேருக்கு மேல் திரண்டு விடுகிறார்கள்.

பிரச்சினையை சமாளிப்பதற்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் அனைத்து வங்கிகளிலும் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு டோக்கன் வழங்கி வருகிறார்கள். சில வங்கிகளில் 400-க்கும் மேற்பட்டோர் இருந்தாலும் தங்கள் வங்கியில் உள்ள பணம் கையிருப்பை பொருத்து 200 முதல் 300 டோக்கன்களை மட்டுமே வழங்குகின்றன. ஆனால் வரிசையில் நின்று டோக்கன் கிடைக்காத பொதுமக்கள், தங்களுக்கும் டோக்கன் வழங்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொதுமக்கள் சாலைமறியல்

இந்த நிலையில் திருப்பூர்-மங்கலம் ரோட்டில் டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள ஒரு வங்கியில் நேற்று காலை 500-க்கும் மேற்பட்டோர் பணம் எடுப்பதற்காக திரண்டு நின்றனர். ஆனால் வங்கி நிர்வாகம் 300 பேருக்கு மட்டுமே பணம் கொடுக்க டோக்கன் வழங்கியது. இதனால் டோக்கன் கிடைக்காதவர்கள், வங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் வங்கி முன்பு சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து சாலைமறியலை கைவிடச்செய்தனர். பின்னர், டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம், மீதம் உள்ளவர்களுக்கு டோக்கன் வழங்குவதாகவும், ஆனால் அவர்களுக்கு நாளை(இன்று) தான் பணம் வழங்க முடியும் என்றும், நாளை யாருக்கும் டோக்கன் வழங்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்கள்.

இதை பொதுமக்கள் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, வங்கி நிர்வாகம் அவர்களுக்கு டோக்கன் வழங்கியது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Monday, October 24, 2016

On Monday, October 24, 2016 by Unknown in    
On Monday, October 24, 2016 by Unknown in    


தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை பட்டாசுகடை விற்பனையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா ஆகியோர் முன்னிலைவகித்தனர்.கூட்டத்தில் கலெக்டர் எஸ்.ஜெயந்தி பேசும்போது கூறியதாவது:–நிரந்தர பட்டாசு கடை உரிமங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை விபத்தில்லாத பண்டிகையாக கொண்டாடுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் உள்ள நிரந்தர பட்டாசு உரிமங்கள், சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ.க்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள நிரந்தர பட்டாசு உரிமங்களை மாநகர போலீஸ் துறை புதுப்பித்தும், தற்காலிக பட்டாசு உரிமங்களையும் வழங்கி வருகிறது. ஊரக பகுதிகளில் உள்ள தற்காலிக பட்டாசு கடைகளுக்கு போலீஸ்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் மாவட்ட வருவாய் அதிகாரியால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உரிமம் வழங்கப்படுகிறது. மேற்படி நிரந்தர பட்டாசு உரிமங்களை புதுப்பித்து வழங்கும் போது ஆர்.டி.ஓ.க்கள் ஆய்வு செய்து தகுதியான இனங்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கப்படும் இடங்களின் விபரம் சம்பந்தப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட தீயணைப்பு அதிகாரி, ஆர்.டி.ஓ.க்கள் மற்றும் தாசில்தார்களுக்கு தெரிவிக்கப்படும். ஆர்.டி.ஓ.க்கள் தங்கள் கோட்டத்தில் உள்ள பட்டாசு கடை உரிமையாளர்கள், துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும்.அதிகாரிகளை கொண்ட ஆய்வுக்குழு

வருவாய், காவல் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளை கொண்ட வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களை அமைத்து, அந்த குழுக்கள் பட்டாசு கடைகளை தொடர்ந்து கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த குழு அனுமதி பெறாமல் இயங்கும் பட்டாசு கடைகளை கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றவும், சம்பந்தப்பட்ட நபர்களின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை குறைந்தபட்சம் 9 சதுர மீட்டர் அளவும் அதிகபட்சம் 25 சதுரமீட்டர் அளவுடன் தரை தளத்தில் மட்டுமே அமைந்திருக்க வேண்டும். கட்டிடத்தின் அடித்தளத்திலும், இரண்டு மாடிகளுக்கு நடுவிலும் அமைக்க கூடாது. மேல் தளத்தில் குடியிருப்பு ஏதும் இருக்கக்கூடாது. எளிதில் தீ பற்றக்கூடிய அல்லது வெடிபொருட்கள் இருப்பு வைக்கப்படும் மற்ற கடைகளில் இருந்து குறைந்தபட்சம் 15 மீட்டர் தொலைவில் அமைந்திருக்க வேண்டும். பாதை குறைந்தபட்சம் 6 மீட்டர் அகலம் இருக்க வேண்டும்.எண்ணெயில் எரியும் விளக்குகள், பாதுகாப்பற்ற மின் இணைப்புகள், சுவிட்ச் போர்டுகள் போன்றவை அனுமதியில்லை. ஐ.எஸ்.ஐ. தர முத்திரையுடன் கூடிய தீயணைப்பான்கள் மற்றும் மணல் வாளிகள், தண்ணீர் வாளிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். கடைக்கு பிரதான வாசல் மற்றும் அவசர காலவழி ஆகிய 2 வாசல்கள் இருக்க வேண்டும். கதவுகள் நல்ல இயங்கும் நிலையில் இருக்க வேண்டும். பட்டாசு கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் போது உரிய பதிவேடுகளை காண்பிப்பதுடன், ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.உரிமம் ரத்து செய்யப்படும்

மேலும், தற்காலிக கொட்டகைகள் எளிதில் தீ பிடிக்காத பொருட்களாலும், குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளிகளில் அமைக்கப்பட வேண்டும். எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவேண்டும். மின் சாதனங்கள் கொட்டகையின் வெளிபுறத்தில் அமைக்கப்பட வேண்டும். பட்டாசுகளை இருப்பு வைக்க குறிப்பிட்டுள்ள பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவிர மற்ற பகுதிகளில் இருப்பு வைக்கக்கூடாது. பார்வையாளர்களுக்கும் பட்டாசுகள் காட்சிக்காக வைக்கப்படும் இடத்திற்கும் குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு வகைகளை, உரிய உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனத்திடம் மட்டுமே வாங்கி விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெற்றுள்ள நபர்களும் உரிய முறையில் பட்டாசு கொள்முதல், விற்பனை, இருப்பு போன்ற கணக்கு விபரங்களை பராமரிக்க வேண்டும்.உரிம இடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் மற்றும் அயல் நாட்டில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. உரிய அனுமதி பெறாமல், கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் செயல்படும் பட்டாசு கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தற்காலிக பட்டாசு உரிமத்தாரர் தனது உரிமத்தை தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாநகர போலீஸ் துணை கமிஷனர் திஷாமிட்டல், ஆர்.டி.ஓ.க்கள் முருகேசன்(திருப்பூர்), சாதனைக்குறள்(உடுமலைப்பேட்டை), தீயணைப்புத்துறையினர் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

On Monday, October 24, 2016 by Unknown in    

தளி,

அமராவதி ஆற்றுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த 2 முதலைகள் சிக்கின. அவற்றை வனத்துறையினர் மீட்டு முதலைப்பண்ணையில் கொண்டு ஒப்படைத்தனர்ஆற்றில் முதலைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து சற்று தொலைவில் உடுமலை-கல்லாபுரம் சாலையில் வனத்துறையால் பராமரிக்கப்படும் முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள முதலைகளுக்கு மாட்டு இறைச்சியும், மீனும் உணவாக வழங்கப்படுகிறது. இங்குள்ள தொட்டிகளின் மேல் பகுதி மூடப்படாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் பறவைகள் முதலைகுட்டிகளை உணவிற்காக எடுத்து செல்லும் நிலை உள்ளது.

அப்போது பறவைகளிடம் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைக்கும் முதலைகுட்டிகள் அமராவதி அணை மற்றும் ஆற்றுப்பகுதியில் வசிக்கின்றன. அப்படி விழும் முதலைகள் புதர்களில் ஆங்காங்கே மறைந்து வாழ்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கணியூர், கடத்தூர், கல்லாபுரம், மடத்துக்குளம் உள்ளிட்ட கரையோர கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் உள்ள முதலைகளை பிடிக்குமாறு வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.ஊருக்குள் புகுந்தன

இந்த நிலையில் கல்லாபுரம் அண்ணாநகர் அருகே வயல்வெளி பகுதியில் ஒரு முதலை சுற்றித்திரிவதாகவும், மற்றொரு முதலை கல்லாபுரம்- கொழுமம் சாலை அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் உள்ளதாகவும் வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த 2 முதலைகளையும் பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 2 முதலைகளையும் முதலைப்பண்ணையில் கொண்டு வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவை அங்கு பரா மரிக்கப்பட்டு வருகின்றன

On Monday, October 24, 2016 by Unknown in    

உடுமலை,உடுமலை நகராட்சி வாரச்சந்தையை புதுப்பொலிவுபெறும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.நகராட்சி வாரசந்தை

உடுமலை ராஜேந்திரா ரோட்டில் நகராட்சி வாரச்சந்தை உள்ளது. இந்த வாரச்சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வரும் வியாபாரிகள், காய்கறிகளை வாங்கி செல்வதற்கு வரும் பொதுமக்கள் ஆகியோருக்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில் வாரச்சந்தை புதுப்பொலிவு பெறும் வகையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், கடைகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது.மழை காலமாதலால் ஓடையை தூர்வாருதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதாள சாக்கடைத்திட்ட பணிகள் நடந்து வருகிறது. உடுமலை தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, இணைப்பு சாலையை அமைக்கவும், உடுமலையில் அம்மா திருமண மண்டபம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நேற்று பார்வையிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.ஆலோசனை

இந்த பணிகள் உள்பட நகராட்சிப்பகுதியின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று உடுமலையில் தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் (சென்னை) உடுமலை நகராட்சி ஆணையாளர் கே.சரவணகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது நகராட்சி பொறியாளர் தங்கராஜ், நகர் நல அலுவலர் டாக்டர் அருண், நகரமைப்பு அலுவலர் பாஸ்கரன், கட்டிட ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

On Monday, October 24, 2016 by Unknown in    

திருப்பூர்,திருப்பூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வடக்கு வட்டத்திற்குட்பட்ட நிரந்தர பட்டாசு கடைகளை திருப்பூர் ஆர்.டி.ஓ.முருகேசன் தலைமையில் வடக்கு தாசில்தார் முருகதாஸ், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், நிலவருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்தசாமி, அண்ணாதுரை ஆகியோர் கொண்ட குழு நேற்று ஆய்வில் ஈடுபட்டனர்.நிரந்தர பட்டாசு விற்பனை கடைகளில் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் கடை பிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்களுடன் கடைகள் செயல்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்கள். விதிகளை மீறினாலோ, உரிமம் இல்லாமல் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.