Showing posts with label Coimbatore. Show all posts
Showing posts with label Coimbatore. Show all posts

Saturday, June 27, 2015

On Saturday, June 27, 2015 by Unknown in ,    
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி வேனில் 21 எருமை மாடுகள் கொண்டு செல்லப்பட்டது. இந்த வேனை நசீம் என்பவர் ஓட்டி வந்தார். வேன் நள்ளிரவு 1 மணியளவில் கோவை–கணபதி சத்தி ரோட்டில் வந்து கொண்டு இருந்தது.
அப்போது இதைப்பார்த்த சிலர் வேனை மடக்கிப்பிடித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாடுகளை மீட்டு நரசிபுரத்தில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். டிரைவர் நசீமிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு மினிவேனில் கொண்டு சென்ற 21 எருமை மாடுகள் பறிமுதல்

Tuesday, October 14, 2014

On Tuesday, October 14, 2014 by farook press in ,    
14-10-2014) மாலை பொள்ளாச்சி நகர திமுக சார்ப்பில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம் நகர செயலாளர் தென்றல் செல்வராஜ் துவங்கிவைத்தார்... சிறப்பு பேச்சாளராக நமது தலைமை கழக பேச்சாளர்கள் சேலம் கோவிந்தன், நா.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.....





Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
சூலூர் போலீஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பத்திரப்பதிவு உள்பட அனைத்து பதிவுகளுக்கும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக கோவை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன. அதன் அடிப்படையில் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், அழகு கண்ணன், ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று மாலை 5.30 மணிக்கு சூலூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றனர்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் பிரதான நுழைவு வாசலை பூட்டினார்கள். பின்னர் அங்கு அதிரடி சோதனை செய்தனர். இதில் அங்கு பதிவு செய்யப்பட்டு இருந்த கணக்கைவிட ரூ.3 லட்சத்து 10 ஆயிரம் அதிகமாக இருந்தது. அதன்பேரில் போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணம் எப்படி வந்தது என்பது குறித்து அங்கு வேலை செய்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
கிணத்துக்கடவு பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் மடிக்கணினி திருடிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தனியார் கல்லூரிகள்
கிணத்துக்கடவு பகுதியில் பல்வேறு தனியார் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி, கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லூரி மாணவர்கள் வைத்தி ருக்கும் மடிக்கணினிகள் திருட்டு போனது. இது தொடர்பாக கிணத்துக்கடவு போலீசில் புகார் அளிக்கப் பட்டது.
புகாரை தொடர்ந்து இன்ஸ் பெக்டர் முருகேசன், சப்– இன்ஸ்பெக்டர் செல் வநாயகம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் மடிக் கணினிகளை திருடிய திருச்சி மணப்பாறையை சேர்ந்த கணேஷ் (வயது 23) என்பவரை கைது செய்தனர். இவர் பகல் நேரங்களில் ஜோசியம் பார்ப் பது போன்று சென்று மாண வர்கள் தங்கி உள்ள வீடுகளை நோட்டமிட்டு, பின்னர் அவர் கள் இல்லாத நேரத்தில் சென்று மடிக்கணினி களை திருடி உள்ளார். இவர் தற் போது கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டுள் ளார்.
குண்டர் சட்டத்தில் கைது
கணேஷ் மீது ஏற்கனவே கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், மதுக்கரை போலீஸ் நிலை யத்தில் 5 வழக்குகளும் என மொத்தம் 11 வழக்குகள் உள்ளன. அனைத்து வழக்கு களும் மடிக்கணினி திருடிய வழக்குகள் ஆகும்.
தொடர்ந்து மடிக்கணினி களை திருடி வந்த கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், இது குறித்து கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று மடிக்கணினிகளை திருடிய கணேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் கிணத்துக்கடவு போலீ சார் கோவை மத்திய சிறைச் சாலை அதிகாரிகளிடம் வழங் கினார்கள்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 2013–14–ம் ஆண்டிற்கு எந்தவித பாகுபாடு மற்றும் உச்சவரம்புகள் இன்றி 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணம் வழங்காததை உடனடியாக வழங்க வேண்டும், பணிமனையில் முழுமையாக தொழில்நுட்ப பணிகளை ஒப்பந்த முறைக்கு கொண்டு வருவதை தடுப்பதுடன், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள் ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி பாபு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. ஜேசுமாணிக்கம் முன்னிலை வகித்தார். முன்னதாக எச்.எம்.எஸ். மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மணி முருகன் நன்றி கூறினார்.

Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய ஆக்கியில் இடம் பெற்ற வீரரை முதல்–மந்திரி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது. இதில் இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த ஆக்கி அணியின் கோல் கீப்பராக கொச்சி பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (29) பணியாற்றினார்.
இதையடுத்து கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டி, ஸ்ரீஜேஷ் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், பென்னிபெகன் எம்.எல்.ஏ., உடன் இருந்தார்.
இது குறித்து முதல்–மந்திரி உம்மன்சாண்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆசிய விளையாட்டு போட்டிகளில், இந்திய ஆக்கி அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜேஷின் பங்கு இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து உள்ளது. அவரை கேரள மக்கள் சார்பாக பாராட்டுகிறேன். இவரை போன்ற சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு கேரள அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும். கேரள மாநில விளையாட்டு வீரர்களுக்கு இவர் முன் உதாரணமாக இருந்து வருகிறார். இவர், கேரள மாநில ஆக்கி அணி வீரர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் டாக்டர் போல உடையணிந்து நகைகள் திருடியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு 10–4–2014 அன்று பிரசவத்துக்காக ஒரு பெண் அனுமதிக்கப்பட்டு இருந்தார். டாக்டர் போல் உடையணிந்த ஒரு ஆசாமி அந்த பெண்ணின் அறைக்கு வந்து, அங்கு இருந்தவர்களை வெளியே அனுப்பினான். பின்னர், ஊசிபோடும் போல் நடித்து அந்த பெண்ணிடம் நகைகள் அணியக்கூடாது என்று கூறினான்.
அதை நம்பிய அந்த பெண் தான் அணிந்து இருந்த 15 பவுன் நகையை கழற்றி வைத்தபோது, அதை அந்த ஆசாமி திருடி சென்றுவிட்டான். இதுபோல் மாநகர பகுதியில் உள்ள 3 மருத்துவமனைகளில் சம்பவம் நடந்தது. எனவே போலீசார் அந்த மருத்துவமனைகளில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர் என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அந்த ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மும்பையில் பதுங்கி இருந்த அந்த நபரை கடந்த 25–7–2014 அன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே (வயது 28) என்பதும், அவருடைய தந்தை அர்ஜூன் பாராஸ்கலே டாக்டர் என்பதும் தெரியவந்தது.
மேலும் தமிழகத்தில் பல இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். அதன்பேரில் போலீசார், ராஜேசை கோவை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இதற்கிடையே கோவை மாநகர பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் ராஜேஷ் திருடியதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதனுக்கு தனிப் படை போலீசார் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து ராஜேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.
தற்போது ராஜேஷ் அர்ஜூன் பாராஸ்கலே கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை தனிப்படை போலீசார் சிறைத்துறை அதி காரிகளிடம் வழங்கினார்கள். இந்த ஆண்டில் கோவை மாநகரில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டதாக இதுவரை 37 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை வெரைட்டி ஹால் ரோட்டை சேர்ந்த வடமாநில வியாபாரிகள் ராம்சிங் உள்பட பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும், பணத்தையும் பறித்ததாக ஜிம் ஹக்கீம் உள்பட 15 பேர்மீது வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இவர்களில் சிலர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். ஜிம் ஹக்கீம் உள்பட சிலர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணை கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முரளீதரன், 20–ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஜெயலலிதா விரைவில் விடுதலை செய்யக்கோரி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி
 சர்வசமய பிரார்த்தனை நடந்தது. தீர்ப்புக்கு எதிர்ப்பு 
.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனிக்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தண்டனை, தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் நேற்று கோவை எஸ்.என்.ஆர்.கல்லூரி கலையரங்கில் சர்வ சமய பிரார்த்தனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், மேயருமான கணபதி ராஜ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இந்து மதம் சார்பில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ மதம் சார்பில் பாதிரியார் அசோக்குமார் (டி.இ.எல்.சி), முஸ்லிம் மதம் சார்பில் ராம்நகர் ஜமாத் தலைமை இமாம் முகமது பாரூக் பாகவி ஆகியோர் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர்.முன்னதாக மேயர் கணபதி ராஜ்குமார் பேசும்போது தாயை இழந்த குழந்தை போல்
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தீர்ப்புக்கு தமிழக மக்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்பை காட்டிவருகின்றனர். பொதுவாக பல்சமய பிரார்த்தனையில் மிகுந்த பலன் உண்டு. இந்த வகையில் சதிகாரர்களால் புனையப்பட்ட பொய்வழக்கால் சிறைக்கு சென்றுள்ள கழக பொதுக்செயலாளரை விடுதலை செய்யக்கோரி இந்த கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. இதில் சாதி, இன, சமய வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபட்டு மனம் உருகி பிராத்தனை செய்வோம். இந்த பிரார்த்தனையில் மிகுந்த வலிமை உண்டு. இந்த பிரார்த்தனையால் தாயை இழந்த குழந்தை போன்று தவிக்கும் தமிழகத்துக்கு விடிவு ஏற்படும் என்று நம்புவோம். மீண்டும் அவர் முதல்–அமைச்சராக வந்து தமிழக மக்களின் கண்ணீரை துடைப்பார். அதற்காக நாம் கையில் தீபங்கள் ஏந்தி கடவுளிடம் மனம் உருக பிரார்த்திப்போம்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் தா.மலரவன், வி.சி.ஆறுக்குட்டி, மண்டல தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்தீபன், பெருமாள்சாமி, குழுத்தலைவர்கள் அம்மன் அர்ஜூனன், பிரபாகரன், சாந்தாமணி, வக்கீல் ராஜேந்திரன், செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.ராஜூ, அண்ணா தொழிற்சங்க தலைவர் நா.கருப்புசாமி, சி.டி.சி.கருணாகரன், முன்னாள் எம்.பி யு.ஆர்.கிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் பீளமேடு துரை, சிங்கை ரங்கநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைகளில் மெழுகு வர்த்தி தீபம் ஏந்தி மவுன பிரார்த்தனை செய்தனர்.
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட தக்னி சுன்னத் ஐக்கிய ஜமாத் சார்பில் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை மற்றும் பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஏ.அகமத் பாஷா தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கலிமுதீன், அப்துல் ரஷீத், நசீர் ஷரீப், அன்வர் பாஷா, ஷேக்பாபு, அப்துல் ஜப்பார், முகமது ஷரீப், அப்துல் மன்னார் சையத்குத்தூஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இதுபோல் ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி செல்வபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் அந்த பகுதியில் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி நேற்று செட்டிவீதி முதல் ஆண்டிபாளையம் வரை, செல்வபுரம் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் செல்வபுரத்தின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த கண்டன கூட்டத்தில், சங்க தலைவர் கருப்பையா, செயலாளர் சிவசேகர், பொருளாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் நாராயணன், லட்சுமிசேகர், துணைதலைவர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இதுபோல் கோவை தியாகி குமரன் மார்க்கெட் காய், கனி சிறுவியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டல் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்கெட் சபூர் பாய் தலைமை தாங்கினார். முத்தலி, உமர்அலி, முஸ்தபா, கிருஷ்ணன், சங்கர், சுக்கூர்பாய், கரீம், விசாலாட்சி, யூசுப், ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 இதுபோல் கோவை உக்கடம் லாரிப்பேட்டை முகமதுஅலி பழைய இரும்பு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்து உள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியி ருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் தொடங்கி உள்ளதால், அவை கோவை வழியாக கர்நாடக வனப்பகுதிக்கு சென்று வருகின்றன.
அவ்வாறு செல்லும் போது காட்டு யானைகள் அருகே உள்ள குடியிருப்புகளில் நுழைந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமலை வனப்பகுதியில் இருந்து 12 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் யானைமடுவு பகுதிக்குள் நுழைந்தன. பின்னர் அந்த யானைகள் அங்கிருந்த வாழைத்தோட்டங் களில் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன. இதை அறிந்த பொதுமக்கள் தீவிர முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
ஆனால் அவை வனத்திற்குள் செல்லாமல் அங்கிருந்து தாளியூர் வழியாக தீனம்பாளையம் பகுதிக்கு சென்றன. பின்னர் தீனம்பாளையம் மெயின் ரோட்டில் சிறிதுநேரம் நின்று கொண்டு இருந்தனர். பின்னர் அங்கிருந்த ஒரு ரேஷன் கடையின் கதவை காட்டுயானைகள் உடைத்து உள்ளே புகுந்தன. பின்னர் ரேஷன் கடையில் இருந்த அரிசியை யானைகள் தின்று தீர்த்தன.

இதை அறிந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து யானைகளை விரட்ட முயன்றனர். மேலும் வனத் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் காட்டுயானைகள் நின்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை வழங்கியதால் அதிர்ச்சியடைந்த லால்குடி கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
மேலும் ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் தற்கொலை செய்தும், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அ.தி.மு.க. உறுப்பினர். இவருடைய மகள் ஜோனாஷா டி சன்னா (வயது 19), லால்குடி பரமசிவபுரத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் படித்து வந்தார்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த ஜோனாஷா டி சன்னா, ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானதை பார்த்ததும் மிகுந்த வேதனை அடைந்தார்.
இதனால் மனமுடைந்த அவர், தனது வீட்டு சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததால், வேதனை தாங்காமல் ஜோனாஷா இந்த துயர முடிவை தேடிக் கொண்டதாக தெரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மாணவியின் உடலுக்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. உள்பட அ.தி.முக. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதைப்போல மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையை அடுத்த வங்கிநாராயணபுரத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் நாகலட்சுமி (வயது 17). இவர் எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார்.
ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட செய்தியை அறிந்தது முதல் நாகலட்சுமி மிகுந்த வேதனையுடன் இருந்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, நாகலட்சுமி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனால் வேதனை தாங்கமுடியாமல் அலறியபடியே தெருவில் ஓடிய அவரை, அந்த பகுதியினர் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதால் சோகத்தில் கோவை அ.தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


கோவை பூசாரிப்பாளையம், சத்யாநகரை சேர்ந்த செல்லமுத்து என்பவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 35), அ.தி.மு.க. உறுப்பினர். கட்டிடங்களுக்கு அலுமினிய ஜன்னல் மற்றும் கம்பிகளை பொருத்தும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட கடந்த 27–ந் தேதி முதல் ரஜினிகாந்த் சோகத்தில் இருந்தார்.
கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்த அவர், அந்த பகுதி அ.தி.மு.க. பிரமுகர்களிடம், ‘ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், எனக்கு உயிர் வாழ பிடிக்கவில்லை. நான் சாகப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க.வினரின் உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினிகாந்தின் அண்ணன் குமார் உள்பட பலர் கலந்துகொள்ளச்சென்றனர். வீட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைத்துக்கொண்டு அந்த படத்தின் முன்பு ரஜினிகாந்த் சோகமாக காணப்பட்டார்.
திடீரென்று விஷத்தை எடுத்து குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.
On Wednesday, October 01, 2014 by farook press in ,    
மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் கோவில் மண்டபம் இடிந்து விழுந்து பூசாரிகள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், மேதர் பிள்ளையார் கோவில் தெருவில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, அதிகாலையில் எழுந்து பூஜை செய்வதற்காக இந்த கோவிலின் பூசாரிகள் பழனிசாமி, குமார், மணிகண்டன் மற்றும் கோத்தகிரி பண்ணாரி அம்மன் கோவில் பூசாரி சோமசுந்தரம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கோவில் மண்டபத்திலேயே படுத்து தூங்கினர்.
இரவில் அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிலில் நின்று கொண்டிருந்த பங்களா மேடு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (வயது 35) மற்றும் அவருடைய நண்பர் பிரபாகரன் (27) ஆகியோரும் பூசாரிகளுடன் கோவில் மண்டபத்திலேயே தூங்கினார்கள்.

பலத்த மழை காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் கோவில் மண்டபம் அருகே இருந்த சாக்கு குடோன் சுவர் இடிந்து மண்டபம் மீது விழுந்தது. இதில் மண்டபத்தின் மேற்கூரை உடைந்து உள்ளே தூங்கிக் கொண்டு இருந்தவர்களின் மேல் விழுந்தது. இதனால் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 6 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
வெளியே வரமுடியாததால் 6 பேரும் காப்பாற்றும்படி கூச்சல் போட்டனர். ஆனால் பலத்த மழையால் அவர்களது சத்தம் வெளியே கேட்கவில்லை.
நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் கோவில் மண்டபம் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்று பொதுமக்களின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் பூசாரிகள் பழனிசாமி, குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் பரிதாபமாக பலியாகி இருந்தது தெரியவந்தது. போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லாரி டிரைவர் செந்தில் (35), பூசாரிகள் சோமசுந்தரம் (36), மணிகண்டன் (25) ஆகியோர் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிக்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Thursday, September 25, 2014

On Thursday, September 25, 2014 by farook press in ,    
தமிழகத்தில் உள்ள 32 முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்–இந்து அமைப்புகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மற்றும் இந்து அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணித்து வருகிறோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் முக்கிய தீவிரவாதியான வைகறை சாகுல் (27) துடியலூர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், இந்து மத தலைவர்களை கொல்ல திட்டமிடுவதற்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
இதற்கான புதிய அமைப்பில் உள்ள தீவிரவாதிகள் ஸ்பி லண்டர் செல்ஸ் எனப்படும் சிமி இயக்கத்தின் முன்னாள் மாணவர் அமைப்பினர் என தெரியவந்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு கடந்த செப்டம்பர் 2001–ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் இணைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தீவிரவாத செயல்கள் செய்ய திட்ட மிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் அமைப்புகளை கண்காணிக்க தொடங்கியுள்ளோம். இது தவிர கடந்த 1998 ஆண்டு நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பின் பழைய குற்றவாளிகள் 150 பேரும் எங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர் களது செயல்பாடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் இந்து அமைப்புகளும் கண்காணிக்கப்படுகிறது. இந்து–முஸ்லிம் மோதலை தடுக்கவே இந்த அமைப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் மாநிலம் முழுவதும் தீவிரவாதிகள் மக்களுடன் மக்களாக இணைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்களது தீவிரவாத அமைப்பில் இருந்து விலகி தனித்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு தங்கள் அமைப்பில் உள்ள சக நபர் யார் என்பது கூட தெரியாது. தலைவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்க செயல்படுகிறார்கள். அவர்களையும் கண்டறியும் பணி மாநிலம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
சமீபத்திய கண்காணிப்பில் தற்போது பிரபலமடைந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்டு சிரியா தீவிரவாத அமைப்பில் இந்திய முஸ்லிம் இளைஞர்களை சேர்க்க மாநிலம் முழுவதும் ரகசியமாக மூளைச்சலவை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதிர்ச்சி தரும் விதமாக முஸ்லிம் இளைஞர்களை சிலிப்பர் செல்ஸ் எனப்படும் தற்கொலை தீவிரவாத படைக்கு ஆட்களை தேர்வு செய்யவும் முயற்சி நடைபெற்று வருகிறது.
இதை தடுக்க தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளோம். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி புதிய தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளவர்களை தீவிரவாத அமைப்பினர் உளவு அமைப்பினராக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
எனவே கோவை மாவட்டத்தில் உள்ள 32 முஸ்லிம் மற்றும் இந்து அமைப்புகள் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையில் நள்ளிரவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து வருகிறார்கள். நேற்று இரவு வெரைட்டி ஹால் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிப்பதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பி, ஸ்குரு டிரைவர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் மணிகண்டன், மாசாணம் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
போலீசார் ரோந்து சென்றிருக்காவிட்டால் நேற்று இரவு கொள்ளையர்கள் கடையில் கைவரிசை காட்டியிருப்பார்கள். கொள்ளை மற்றும் வழப்பறியை தடுக்க ரோந்துபணி தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப்.24–
கோவையை அடுத்த நீலாம்பூரில் மஹாராஜா தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த திங்கட்கிழமை கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக கூறி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் மாணவ பிரதிநிதிகளில் சிலரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதிப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கல்லூரி நிர்வாகம் அரசின் விதிமுறைகளை மீறி கல்வி கட்டணத்தை கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அதை தடுத்து தாங்கள் கல்லூரிக்கு கூடுதலாக செலுத்தி கட்டணங்களை திரும்ப பெற்று தர வேண்டும்.
இனிமேல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்துவதாக கலெக்டர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பினர்.
கல்லூரியில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து கல்லூரியை கண்டித்து கல்லூரிக்கு வெளியே வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் ஆரம்பித்த போராட்டம் இரவும் நீடித்தது. கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் இரவு கஞ்சித் தொட்டி அமைத்தனர்.
மேலும் விடிய விடிய 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தரையில் அமர்ந்து கல்லூரியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் இரவில் திடீரென்று கனமழை பெய்தது. மழையையும் பொருப்படுத்தாமல் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். இது பார்ப்போரையும் பரிதவிக்க செய்யும் விதமாக இருந்தது.
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மழையில் தொடர்ந்து நனைந்தபடி இருந்ததால் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவி லாவண்யா மற்றும் மெக்கானிக்கல் இறுதி ஆண்டு மாணவர் மனோஜ் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினர். மற்ற மாணவர்கள் 108 ஆம்புலன்சு உதவியுடன் பாதிக்கப்பட்ட 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தொடர்ந்து இன்று காலையும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக கல்லூரி முன்பு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
வால்பாறை, செப்.24–
கோவை மாவட்டம் பெரியகல்லாறு, சின்னக்கல்லாறு, சின்கோனா மற்றும் நீராறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20 யானைகள் கொண்ட கூட்டம் உலா வருகின்றன. நேற்று மாலை 3 பெரிய யானை மற்றும் 3 சிறிய யானை என 6 யானைகள் கொண்ட கூட்டம் நீராறு அணைப்பகுதியில் உள்ள வனத்தில் முகாமிட்டிருந்தன.
நள்ளிரவு 11.30 மணியளவில் காட்டு யானைகள் கூட்டம் நீராறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்தனர்.
4 மணி நேரம் நீராறு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அதிகாலை 2.30 மணியளவில் சின்கோனா பத்தாம்பாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றன. அங்கு ஆட்கள் இல்லாத வீட்டில் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து சாப்பிட உணவு பொருட்கள் உள்ளனவா? என தேடின.
பின்னர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்த விஜயகுமாரி என்ற பெண் தொழிலாளியின் வீட்டுக்கு சென்றன. விஜயகுமாரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காட்டு யானை கூட்டத்தில் இருந்த ஒரு யானை சமையலறை பகுதிக்கு சென்று அங்கிருந்த ஜன்னலை உடைத்து தும்பிக்கையை உள்ளே நுழைத்தது.
சமையலறையில் அரிசி, பருப்பு உள்ளதா? என தேடிய போது பாத்திரங்கள் உருண்டோடின. சத்தம் கேட்டு எழுந்த விஜயகுமாரி சமையலறையில் பார்த்த போது யானையின் தும்பிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்தார். யானையிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்கதவை திறந்து வெளியே ஓட முயன்றார். கதவை திறந்த போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்தது.
மீண்டும் அச்சத்தில் நடுநடுங்கிய விஜயகுமாரி தீப்பந்தத்தை ஏற்றி யானையை துரத்தினார். பின்னர் கதவை சாத்தி கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு சத்தம் போட்டார். விஜயகுமாரியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது 6 யானைகளும் அங்கேயே முகாமிட்டிருந்தன.
பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொது மக்களுடன் இணைந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 3ž மணியளவில் வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன.
இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் கூறும்போது காட்டு யானைகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் இதை கண்டித்து சாலைமறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வங்கியை அலுவலர்கள் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் இரவு வங்கியின் காம்பவுண்டு சுவரை தாண்டி 2 கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்தனர். அப்போது ஜன்னலில் இருந்த கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வங்கியின் இரவு காவலாளி கோபால் வங்கிக்கு பின்புறம் சென்று பார்த்தார்.
காவலாளியை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவலாளி கோபால் வங்கி மேலாளர் லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொள்ளை சம்பவம் குறித்து க.க.சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வங்கியில் பொருத்தியிருந்த கேமிராவை ஆய்வு செய்து பார்த்த போது அதில் கொள்ளை முயற்சி சம்பவம் பதிவாகியிருந்தது. அதில் இருந்த 2 பேரின் புகைப்படத்தை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவை பீளமேட்டில் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமானங்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. தொழில் அதிபர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பலர் இந்த விமான நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் கோவை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் கேட்பாராற்று ஒரு மர்ம பேக் நீண்ட நேரமாக உள்ளது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து வெடிகுண்டு இருந்தால் அதனை செயல் இழக்க செய்யுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
உஷாரான போலீசார் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மற்றும் மேப்ப நாயுடன் உடனடியாக சென்றனர். போனில் கிடைத்த தகவல்படி கார் நிறுத்துமிடத்தில் மர்ம பேக் இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வெறும் காலி பேக் என்றும் பயணிகள் யாரோ தேவையில்லை என்று போட்டுச்சென்றிருக்கலாம் என்று தெரியவருகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவை பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது பைன் பியூச்சர் நிறுவனம். இந்நிறுவனத்தின் இயக்குனர்களாக விவேக், செந்தில்குமார், நித்யானந்தா ஆகியோர் இருந்தனர்.
கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்து பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டனர். முதலீட்டாளர்களின் புகாரையடுத்து பைன் பியூச்சர் நிறுவனத்தின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இயக்குனர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர். ஆர்.எஸ்.புரத்தில் பைன் பியூச்சருக்கு சொந்தமாக வணிக வளாகம் உள்ளது. இது குறித்தும் கோவை பொருளாராத குற்றப்பிரிவில் வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விவேக் குறிப்பிட்ட வணிக வளாகத்துக்கு சென்று கடையின் வாடகையை தன்னிடம் தருமாறு அங்குள்ளவர்களிடம் கேட்டார். வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது எப்படி உங்களிடம் வாடகை தரமுடியும். நாளை கோர்ட்டு எங்களிடம் வாடகை கேட்டால் என்ன செய்வது என்று கூறினர்.
வணிக வளாகம் எனக்கு சொந்தம். நான் தான் உங்களுக்கு இடம் கொடுத்தேன். என்னிடம் தான் வாடகை கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக தெரிகிறது.
இது குறித்து வணிக வளாகத்தில் வாடகைக்கு உள்ளவர்கள் கோவை பொருளாதாரா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இது குறித்து விவேக் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
On Sunday, September 21, 2014 by farook press in ,    
கோவையை அடுத்த நெகமம் அருகேயுள்ள பனப்பட்டி ஊராட்சி தலைவராக இருப்பவர் சதாசிவம் (வயது 48).
இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சசிகலா. குடிப்பழக்கம் உள்ள முருகேசன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போடுவார்.
வழக்கம் போல போதையில் வந்த முருகேசன் தனது மனைவியுடன் சண்டை போட்டார். வாய்க்குவந்தபடி திட்டினார். பொறுமையிழந்த சசிகலா பக்கத்து வீட்டில் உள்ள பஞ்சாயத்து தலைவரிடம் ‘எனது கணவர் என்னிடம் சண்டைக்கு வருகிறார். அவரை தட்டிக்கேளுங்கள்’ என்றார்.
உடனே சதாசிவம் அங்கு வந்து முருகேசனை சத்தம் போட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘என்னை தட்டிக்கேட்க நீ யார்?’ என்று ஆவேசமாய் பேசிய முருகேசன் திடீரென்று பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தின் வலது கை ஆள்காட்டி விரலை கடித்து துப்பினார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டார். வலியால் அலறி துடித்த பஞ்சாயத்து தலைவர் சதாசிவத்தை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விரலை பறிகொடுத்த சதாசிவம் நெகமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முருகேசனை தேடி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவரின் கைவிரலை தொழிலாளி கடித்து துப்பிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.