Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, மகன்கள் மார்ட்டின், சில்வர் ஸ்டார் ஆகிய இருவருக்கும், சமீபத்தில், பாகபிரிவினை செய்து வைத்துள்ளார்.

இதில் உடன்பட்டு ஏற்படாததால், மூத்தமகன் மார்ட்டின், அடிக்கடி தந்தையிடம் கூடுதல் சொத்து கொடுக்கவேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

அத்தோடு, சரிவர வேலைக்கு போகாமல், சும்மா சுற்றிக்கொண்டு, மது அருந்திவிட்டு உள்ளூரில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல, நேற்று, அளவுக்கு அதிகமாக மதுகுடித்த மார்ட்டின், எனக்கு மட்டும் சொத்து குறைவாக கொடுத்தாய் என்று சொல்லி பிரச்னை செய்து, அன்புரோஸை தாக்க முயன்றார்.

இதனால், ஆத்திரமடைந்த அன்புரோஸ், தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மகன் மார்டினை சுட்டுள்ளார். குறி தவறி சுட்டதில், மார்டினின் வயிற்று பகுதியில், பால்ரஸ் குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த காயத்துடன், உயிர் தப்பினார். அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக, அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, அந்தியூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, அன்புரோஸை கைது செய்து, அவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

Saturday, October 18, 2014

On Saturday, October 18, 2014 by farook press in ,    
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் விடுதலையை கொண்டாடினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு கூடினார்கள். அவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். மகளிர் அணியினர் சிலர் மகிழ்ச்சி காரணமாக மேயர் மல்லிகா பரமசிவத்தை சுமந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் நேர்ச்சையை செலுத்தினார்கள். பெரிய மாரியம்மனுக்கு அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
On Saturday, October 18, 2014 by farook press in ,    
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–இலங்கை அகதி 
ஊஞ்சலூர் அருகே ஈஞ்சம்பள்ளியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இதில் வசித்து வந்தவர் இலங்கேஸ்வரன் (வயது 49). அவருடைய மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு இந்துமதி (25), துர்கா (22) ஆகிய 2 மகள்களும், ஜெகதீஸ்வரன் (16), வெங்கடேஸ்வரன் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு இலங்கையில் இருந்து இங்கு வந்து தங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் திடீரென இலங்கேஸ்வரன் யாரிடமும் சொல்லாமல் அகதிகள் முகாமை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அரசு பதிவேட்டில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டது. பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அகதிகள் முகாமுக்கு திரும்பி வந்தார். அப்போது தனது பெயரை மீண்டும் அரசு பதிவேட்டில் சேர்த்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தினார்.
இதற்கிடையில் இலங்கேஸ்வரன் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த இலங்கேஸ்வரன் நேற்று மாலை அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அக்கம்பக்கத்தினர் மலையம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இலங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டத்தில் யூரியா உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் அவதி அடைந்து உள்ளனர். எனவே வேளாண்மைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.ரசாயன உரங்கள்ஈரோடு மாவட்டத்தில் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, கீழ்பவானி, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்கள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதியில் நெல், வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும் விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.பயிர்கள் செழித்து வளரவும், நோய் தாக்குதலை தடுக்கவும் விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தழை சத்து அதிகரிக்க யூரியா உரமும், மணி சத்து அதிகரிக்க பொட்டாஷ் உரமும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், பருவமழை தொடங்கியதாலும் விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதிகமாக யூரியா உரங்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் யூரியா உரம் இருப்பு இல்லாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். யூரியா பற்றாக்குறை காரணமாக தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் சுபிதளபதி கூறியதாவது:-வாய்க்கால்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதையொட்டி விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண்மை துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் யூரியா உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரம் இருப்பு இல்லை. இதனால் விவசாயிகள் உரம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தனியார் கடைகளில் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு உரக்கிடங்கிற்கு 6 ஆயிரம் டன் யூரியா இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் வேளாண்மை துறை அதிகாரிகள் அந்த உரங்களை பிரித்து அனுப்ப தாமதப்படுத்துகின்றனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதா? என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடந்த 20 நாட்களாக விவசாயிகள் உரங்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விலை பட்டியல் வைக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் உரக்கடைகளில் இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றுவது கிடையாது. எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யூரியா தட்டுப்பாடு குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வராஜூடம் கேட்டதற்கு அவர் கூறும்போது, “தாளவாடியில் 8 கூட்டுறவு சங்கங்களும், கோபிசெட்டிபாளையத்தில் 18 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் 15 டன் வரை யூரியா அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் யூரியாவின் தேவை அதிகமாக உள்ளதால் உடனடியாக விற்பனையாகிவிடுகிறது. ஈரோட்டில் யூரியா இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அனைத்து பகுதிக்கும் யூரியா அனுப்பி வைக்கப்பட்டு பற்றாக்குறை சரிசெய்யப்படும்.“, என்றார்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்களுக்கான பூப்பந்து போட்டி திண்டல் வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இந்த போட்டியில் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட 7 என்ஜினீயரிங் கல்லூரி அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் ஈரோடு செங்குந்தர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் அணி கலந்துகொண்டு விளையாடி முதல் இடத்தை பிடித்தது.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் எஸ்.சிவானந்தன், தாளாளர் ஆர்.மோகன்ராஜ், முதல்வர் ஏ.டி.ரவிச்சந்திரன் மற்றும் உடற்கல்வி துறை இயக்குனர்கள், பேராசிரியர்கள், பேராசிரியைகள், மாணவ–மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
அந்தியூர், பெருந்துறை, அம்மாபேட்டை பகுதி கோவில்களில் அ.தி.மு.க. வினர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார்கள். மசூதியில் தொழுகையும் நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுதலை ஆக வேண்டியும், அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டியும் ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 108 பால்குடங்கள் எடுத்து அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அந்தியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ்.ராஜா தலைமையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து பொங்கல் வைத்து படைத்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பூர் சத்தியபாமாவாசு எம்.பி., அந்தியூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அப்பாநாயக்கர், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டி.ஆர் முனுசாமிநாயுடு, அந்தியூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம், ஈரோடு மாவட்ட செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்க செயலாளர் பழனிச்சாமி, பெருளாளர் ராஜாமணி, நகலூர் ஊராட்சி தலைவர் வெள்ளியங்கிரி உட்பட அ.தி.மு.க.வினர் திரளாக கலந்துகொண்டனர்.இதேபோல் செல்லீஸ்வரர் கோவில் மற்றும் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. அதைதொடர்ந்து அந்தியூர் கெட்டிவிநாயகர் கோவிலில் ஒன்றிய செயலாளர் கே.பி.எஸ். ராஜா தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் 108 தேங்காய்கள் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.
நிகழ்ச்சியில் அந்தியூர் பேரூராட்சி துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், கவுன்சிலர் சிவக்குமார், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ரேவதிசண்முகவேல், கவுன்சிலர் ஜெயபிரகாஷ், செங்கல் உற்பத்தியாளர்கள் செல்வம் துரைசாமி உட்பட அ.தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.மேலும் அ.தி.மு.க.வினர் பெருந்துறை செல்லாண்டி அம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. செயலாளர் திங்களூர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஏ.கே.சாமிநாதன், ஒன்றியக்குழு தலைவர் பெரியசாமி, பேரூராட்சி தலைவர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் கைலங்கிரி குப்புசாமி, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர்கள் சேனாபதி, சுப்ரமணியம், பேரூராட்சி கவுன்சிலர்கள் சுப்ரமணியம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
ஒலகடம் பேரூர் அ.தி.மு.க. சார்பில் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் குந்துபாயூர் மசூதியில் அ.தி.மு.க.வினர் சிறப்பு தொழுகை நடத்தினார்கள். நிகழ்ச்சிக்கு பேரூர் அ.தி.மு.க. செயலாளர் வி.ஐ.முத்துசாமி தலைமை தாங்கினார். பவானி பி.ஜி.நாராயணன் எம்.எல்.ஏ., அம்மாபேட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வி.எஸ்.சரவணபவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் எஸ்.எஸ்.அய்யாசாமி, மாவட்ட கவுன்சிலர் எஸ்.டி.சக்திவேல், பேரூராட்சி துணைத்தலைவர் முகமது சர்தார், பேரூர் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்பசேகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வடிவேல், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தலைவர் பூபதி, ஒன்றிய பொருளாளர் செங்கோட்டுவேல் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் 
On Saturday, October 11, 2014 by farook press in ,    
கீழ்பவானி கிளைவாய்க்கால் பாசன பகுதியில் ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி மண்பாதை அமைக்கப்பட்டது.ஈரோடு காஞ்சிக்கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இருந்து பிரிக்கப்படும் பள்ளபாளையம் கிளை வாய்க்கால் மூலம் 554 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பள்ளபாளையம் கிளை வாய்க்கால் முழுமையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பாதை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் இடது கரையில் கடைமடை பகுதி வரை நீர் நிர்வாகம் செய்யவும் வேளாண் இடுபொருட்களை கொண்டு செல்லவும், விளைபொருட்களை எடுத்து செல்லமுடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்ட யு–10 பாசனசபை நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தாங்களாகவே முன் வந்தால் பாதை வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம் என தகவல் தெரிவித்தனர்.
பாசன சபையினரின் முடிவின்படி வாய்க்காலின் அய்யன்வலசு சாலை முதல் கடைமடை பகுதி வரை இடது கரை அருகே நிலத்தில் பயிர்செய்திருந்த மஞ்சள், மக்காச்சோளம், கரும்பு போன்ற பயிர்களை அந்தந்த விவசாயிகளே முன்வந்து அகற்றினார்கள். அதன்பின்னர் அந்த இடத்தில் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் அளவுக்கு மண்பாதை அமைக்கப்பட்டது.
மேலும் வாய்க்கால் தூர்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இதற்கு செலவான 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அந்தந்த பகுதி விவசாயிகளே ஏற்று கொண்டனர்.
விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பு பயிர்களை அகற்றி ஏற்படுத்திய மண்பாதையை கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன், இணைச்செயலாளர் வெங்கடாசலபதி, பகிர்மான கமிட்டி தலைவர் செங்கோட்டையன், யு–10 பாசன சபை தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் வெங்கடாசலம், செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
On Saturday, October 11, 2014 by farook press in ,    
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிப்புதூர் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பன். அவருடைய மகன் கே.ராம்கி (வயது 25). பி.பி.ஏ. பட்டதாரி. பள்ளிபாளையத்தில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக உள்ளார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. அவருடைய மகள் கே.தங்க சிவசங்கரி (24). பி.காம் பட்டதாரி.
இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றினர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.இதற்கிடையே ராம்கி அங்குள்ள விசைத்தறிக்கூடத்தில் மேலாளராக வேலைக்கு சேர்ந்தார். ஆனாலும் 2 பேரும் செல்போன் மூலம் தங்கள் காதலை தொடர்ந்து வளர்த்துக்கொண்டனர். இந்த நிலையில் 2 பேரின் காதலும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 பேரின் குடும்பத்தினரும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென்று சிவசங்கரியின் பெற்றோர் திருமணம் நடைபெறுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சிவசங்கரியை பள்ளிபாளையத்தில் இருந்து பெங்களூர் மற்றும் கரூரில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பள்ளிபாளையத்துக்கு சிவசங்கரி வந்தார். பின்னர் ராம்கியும், சிவசங்கரியும் வீட்டை விட்டு வெளியேறி ஈரோட்டுக்கு வந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ராம்கியும், சிவசங்கரியும் தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒக்கிலிப்பட்டியை சேர்ந்தவர் குப்புசாமி. அவருடைய மகன் குமார் என்ற கோபாலகிருஷ்ணன் (30). பி.ஏ. பட்டதாரி. இவர் பள்ளிபாளையத்தில் நூல் கோண் அட்டை தயாரிக்கும் கம்பெனி வைத்து உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள செங்காளிகாடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். அவருடைய மகள் சோனியா என்ற நித்யா (26). எம்.பி.ஏ. பட்டதாரி.
திருச்செங்கோட்டில் உள்ள பள்ளியில் நித்யா படிக்கும்போது அவருக்கும், குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமும் தங்கள் காதலை வளர்த்துக்கொண்டனர்.
இவர்களுடைய காதல் 2 பேரின் பெற்றோருக்கும் தெரியவந்தது. ஆனால் சோனியாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று வீட்டை விட்டு வெளியேறிய குமாரும், சோனியாவும் திருமணம் செய்து கொண்டு ஈரோடு கருங்கல்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் 2 பேரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
--–

Wednesday, October 08, 2014

On Wednesday, October 08, 2014 by farook press in ,    
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகினசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனு£ர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர் வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் கிடைத்து வந்தது. இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டுபோனது. மேலும் வனப்பகுதி முற்றிலும் காய்ந்துபோனது. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது.இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வன ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோட்டோரம் ஓடும் வன ஓடைகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து கும்மாளம் அடிக்கின்றன. பின்னர் வனஓடைகளில் உள்ள தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு செல்கின்றன.
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சாணை பிடிக்கும் கல் விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். நஷ்டஈடு வழங்க கோரி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னிமலை அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம். அவருடைய மகன் ஆதிசங்கர் (வயது 27). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் எந்திரங்கள் பிரிவில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் கார் உதிரிபாகங்களை கல்லில் சாணை பிடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கல் உடைந்து ஆதிசங்கர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆதிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் இறந்த ஆதிசங்கரின் உறவினர்கள் 100-க் கும் மேற்பட்டோர் நேற்று மதியம் ஒரு மணி அளவில் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ரவுண்டானாவில் ஒன்று கூடினார்கள். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆதிசங்கரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், இறந்த ஆதிசங்கரின் குடும்பத்துக்கு தொழிற்சாலை நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று முறையிட்டனர்.
அதற்கு போலீசார், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
On Wednesday, October 08, 2014 by farook press in ,    
ஈரோடு எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் காலி நிலத்தில் திடீரென்று நீரூற்று தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இடி விழுந்ததால் இந்த நீரூற்று தோன்றியதா? என்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.ஈரோடு மாநகராட்சி 14-வது வார்டு பகுதிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பி. நகர். இங்கு ராசாம்பாளையம் ரோட்டில் ஒரு ஓடைப்பள்ளம் உள்ளது. இந்த பகுதியையொட்டி ஸ்டாலின் வீதி என்ற குடியிருப்பு பகுதி இருக்கிறது. வீடுகளுக்கு இடையே உள்ள காலி நிலத்தில் முள்செடிகள் வளர்ந்து காடுபோல் கிடக்கிறது.நேற்று முன்தினம் இரவு ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவரது வீட்டின் எதிரே உள்ள காலி நிலத்தில் கணுக்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குமிழ்விட்டு ஊற்றெடுத்துக்கொண்டிருந்தது. பொங்கி வழியும் தண்ணீர் அருகில் உள்ள ஓடை வழியாக வெளியேறிக் கொண்டிருந்தாலும் காலி இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கொஞ்சமும் குறையாமல் பெருகிக்கொண்டே இருந்தது.இதுபற்றி அவர் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த தகவல் பரவியதால் அந்த பகுதியை சேர்ந்த பலரும் அங்கு வந்து பார்த்தனர். ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குமிழ் குமிழாக நீரூற்று தோன்றி இருந்தது.இடி விழுந்ததால் தான் இப்படி நீரூற்று ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இடி விழுந்ததால்தான் இந்த திடீர் நீரூற்று ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள். ஆனால் குடியிருப்பு பகுதியில் இடிவிழுந்ததா? இது தாழ்வான பகுதி என்பதால் உயர்ந்த பகுதியில் உள்ள வயல்வெளி தண்ணீர் ஊற்றெடுத்து உள்ளதா? என்பது பற்றி ஈரோடு தாசில்தார் அன்னபூரணி, துணை தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு சோதனை செய்து வருகிறார்கள்.

Saturday, October 04, 2014

On Saturday, October 04, 2014 by farook press in ,    
அந்தியூர் பஸ்நிலையத்திற்கு தினமும் 500–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் அந்தியூர் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால் தங்களது தேவைகள் மற்றும் மருத்துவமனைக்கு செல்லுதல் மற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிகளுக்கும் வெளியூர் கல்லூரிகளுக்கு அந்தியூர் பஸ்நிலையத்தில் இருந்து செல்கின்றனர் கர்நாடக மாநிலத்திற்கு அந் தியூரில் இருந்து மைசூர் பகுதிக்கு எளிதாக செல்ல பர்கூர் மலைப்பாதையை பயன் படுத்திவருகின்றனர் அதனால் அந்தியூர் பஸ்நிலை அனைத்து கிராமக்களும் கூடுவதால் எப்போதும் பரபரப்பாவே காணப்ப டும் இங்கு உள்ள பஸ்நிலையத்தில் நடைபாதை மிகவும் பழுது அடைந்து விட்டது அதனால் முதியவர்கள் கம்பு ஊன்றி கூட செல்லமுடியாத நிலையில் உள்ளது சிறுவர்கள் பஸ்வந்தவுடன் ஓடி பஸ்ஏறும் ஆர்வத்திலும் இருக்கையை பிடிக்கவேண்டும் என்ற வேகத்லும் செல்லும் பொழுது பல சமையங்களில் அந்த ஆப்த்தான பள்ளதில் கால் இடரி விழுந்து விடுகின் றனர் இரவு நேரத்தில் மின்சப்பாளை நிறுத்தம் என்றால் முதியவர் முதல் பெரியவர்கள் சிறியவர்களின் நிலையும் தட்டுதடுமாரி சென்று பஸ்ஏற வேண்டிய நிலையுள்ளது வாரத்திற்கு 2 பேராவது கிழேவிழுந்து கயாம் ஏற்படுத்திகொள்கின்றனர் சில சமயங்கிளல் பஸ்சில் இருந்து இறங்கும்பொழுது விழுந்து கால்முறிவுகளும் ஏற்பட்டுவருகின்றன மேலும் அதன் கீழ் சார்கடைநீர் செல்வதால் எப்போழுதும் துர்நாற்றம் வீசிகொண்டே இருக்கும்
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோடு நகரம் ஜவுளி மற்றும் மஞ்சளுக்கு பெயர் பெற்ற நகரம் ஆகும். மேலும் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தனியார் பள்ளிக்கூடங்கள் என பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே ஈரோட்டுக்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் மஞ்சள் மற்றும் ஜவுளி வியாபாரிகள், மாணவ–மாணவிகள் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஈரோடு ரெயில் நிலையம் வந்துதான் மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இந்த ரெயில் நிலையம் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் தென்னக மாவட்டங்களின் முக்கிய சந்திப்பாகவும் உள்ளது. எனவே ஈரோடு ரெயில் நிலையம் வழியாக தினமும் 120–க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ஈரோடு வழியாக பயணிக்கிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக ஈரோடு ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 நடைமேடைகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த ரெயில் நிலையத்தில் 15–க்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சுற்றி வருகிறார்கள். இவர்கள் அந்தந்த நடைமேடைகளில் நின்று கொண்டு ரெயில் ஏறும் மற்றும் இறங்கும் பயணிகளிடம் பிச்சை எடுக்கிறார்கள்.
சில மனநோயாளிகள் குறிப்பாக பெண்களிடம் திடீரென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டு ஓவென்று சிரித்துவிட்டு அங்கிருந்து ஓடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை பெண்கள் தங்களுடைய குடும்பத்தினரிடமோ மற்ற சக பயணிகளிடமோ சொல்லமுடியாமல் தவிக்கிறார்கள். சிலர் ரெயில் தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டு ரெயில் வரும்போது அதனுடன் மல்லு கட்டுவதுபோல் போஸ் கொடுக்கிறார்கள். அப்போது அவர்களின் உயிர்களை காப்பாற்ற சில பயணிகள் சத்தம் போட்டு அவர்களை விரட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து ரெயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ் கூறியதாவது:–
மனநோயாளிகள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இது எங்களுக்கும் தெரியும். ஆனால் சில நேரங்களில் மன நோயாளிகள் ரெயில் ஏற வரும் பெண் பயணிகளை இடிப்பது போன்று வருவது, நெஞ்சு பகுதியில் கை வைப்பது போன்ற அருவருக்கத்தக்க, கூசத்தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அப்போது பெண் பயணிகளோ அல்லது உறவினர்களோ இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீசார் எங்களிடம் கூறுகிறார்கள். உடனே நாங்கள் நடைமேடைகளில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் மனநோயாளிகளை சத்தம் போட்டால் மற்ற பயணிகள் அவர்கள் மீது அனுதாபப்படுகிறார்கள். எங்கள் (போலீஸ்) மீது கோபப்படுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணிக்கு குறிப்பிட்ட மனநோயாளியை நாங்கள் ஏன் திட்டுகிறோம் என்பது தெரியும். ஆனால் மற்ற பயணிகளுக்கு இது புரிய வாய்ப்பில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் 3–வது நடைமேடையில் ஒரு குடும்பத்தினர் தன்னுடைய 3 வயது குழந்தையுடன் வந்திருந்தனர். அப்போது அந்த குழந்தை அங்கு உட்கார்ந்து இருந்த மனநோயாளியிடம் சென்று விட்டது. என்ன காரணத்தினாலோ அவர் அந்த குழந்தையை திடீரென்று தனது காலால் ஓங்கி உதைத்து தள்ளிவிட்டு எதுவும் நடக்காது போல் உட்கார்ந்திருந்தார்.
ஓங்கி உதைத்ததில் அந்த குழந்தை நடைமேடையில் இருந்து தண்டவாளத்தில் விழப்போனது.
இதனை கவனித்த அந்த குழந்தையின் தந்தை கீழே விழாமல் தடுத்து குழந்தையை பிடித்து விட்டார். உடனே அவர் இதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு வந்து எங்களிடம் கூறினார்.
நாங்கள் அந்த மனநோயாளி இருந்த இடத்தை நோக்கி சென்றோம். ஆனால் எங்களை கண்டதும் நாங்கள் சத்தம் போட்டு திட்டுவதற்கு முன்பே அந்த மனநோயாளி ஓவென்று அழுது கொண்டே அங்கிருந்து ஓடிவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகளால் மனநோயாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதா? அல்லது ரெயில் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதா? என்பதில் எங்களுக்கு சில சமயங்களில் சிரமம் ஏற்படுகிறது.
இவ்வாறு அந்த போலீஸ் கூறினார்.
எனவே ஈரோடு ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மனநோயாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
அறச்சலூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அறச்சலூர் நடுவீதியை சேர்ந்தவர் அன்புராஜ். அவருடைய மகன் அருண்குமார் (வயது 17). அறச்சலூரில் உள்ள ஒரு இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதிபூஜை என்பதால், கடையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது கடையில் உள்ள தள்ளுவண்டியை கழுவுவதற்காக அருண்குமார் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றார்.
வாய்காலுக்கு சென்றவர் மாலை வரை கடைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் ஊழியர்களுடன் வாய்க்காலுக்கு சென்று பார்த்தார்.
வாய்க்கால் கரையில் தள்ளுவண்டி நின்றது. அருண்குமாரின் உடைகள் கிடந்தன. அருண்குமாரை காணவில்லை. இதனால் அவர் வாய்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் அருண்குமாரின் பெற்றோருக்கும், அறச்சலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் கிடைத்து, அறச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை அறச்சலூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊத்தங்காடு என்ற இடத்தில் வாய்க்கால் தண்ணீரில் அருண்குமார் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டார்கள். அருண்குமார் வாய்க்காலில் இறங்கியபோது, தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுகுறித்து அறச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனின் உடலை பார்த்து அருண்குமாரின் பெற்றோர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
On Saturday, October 04, 2014 by farook press in ,    
ஈரோட்டில் கட்டிடத்துக்குள் அனாதையாக கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதி அக்ரகாரம் வீதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விரிவாக்க கட்டிட பணிகள் நடந்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் கட்டிட பணியாளர்கள் வேலைக்காக வந்தனர். அப்போது கட்டிடத்தின் உள்ளே பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடிப்பார்த்தனர். அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை பகுதியில் துணியால் போர்த்தப்பட்ட நிலையில் ஒரு அழகிய பச்சிளம் பெண் குழந்தை கேட்பாரின்றி கிடந்தது.
அந்த குழந்தை ஆதரவின்றி கதறி அழுது கொண்டிருந்தது. அதைப்பார்த்த அவர்கள் ஓடிச்சென்றனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூடினார்கள். குழந்தை அழுது அழுது முகம் சிவந்து கிடந்தது. அந்த குழந்தை பிறந்து சில மணி நேரங்களே ஆகி இருந்தது. தொப்புள்கொடி ஈரம் கூட காயாமல் இருந்தது.
வெறும் தரையில் கை-கால்களை அடித்துக்கொண்டு அந்த குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது. இரக்க மனது கொண்ட சில பெண்கள் குழந்தையை கையோடு எடுத்து அணைத்துக்கொண்டனர். அதன் பிறகே குழந்தை அழுகையை நிறுத்தியது. யாராவது அக்கம்பக்கத்தில் நிற்கிறார்களா? என்று பொதுமக்கள் தேடிப்பார்த்தனர். ஆனால் யாரையும் காணவில்லை. அதைத்தொடர்ந்து சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு மூலம் குழந்தை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ அதிகாரிகள் குழந்தையை பெற்றுக்கொண்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர். குழந்தைக்கு உடை அணிவித்து நன்றாக கவனித்து வருகிறார்கள
இதற்கிடையே தகவல் அறிந்து கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அகஸ்டின்பீட்டர், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும், குழந்தையை வீசிச்சென்றவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? வெளியூரில் இருந்து வந்து குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டு சென்று விட்டார்களா? குழந்தை தவறான நடத்தை மூலம் பெறப்பட்டதா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீதியில் வீசப்பட்டதா? என்பது தெரியவில்லை.குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்ச தாயை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Saturday, September 20, 2014

On Saturday, September 20, 2014 by farook press in ,    

அறச்சலூர் அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் சாவடிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 44). தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி உள்ளார். அதனால் சாவடிக்காடு பகுதியில் உள்ள வீட்டை அதே பகுதியில் வசிக்கும் ஈஸ்வரனின் மாமனார் அண்ணாமலை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை ஈஸ்வரனின் வீட்டுக்கு அண்ணாமலை சென்றார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும், வீட்டில் இருந்து எல்.ஈ.டி. டி.வி.யையும் காணாதது கண்டு திடுக்கிட்டார். யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணத்தையும், டி.வியையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை உடனடியாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நிச்சாம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). அவருடைய மனைவி பழனியம்மாள் (38). இவர்களுக்கு கார்த்தி (23), தங்கராசு (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் கார்த்தி திருப்பூர் பனியன் நிறுவனத்தில்வேலை செய்து வருகிறார். தங்கராசு பாலிடெக்னிக்கில் படித்து வேலை தேடி வந்தார். நேற்று காலை துணி துவைப்பதற்காக கருப்பசாமி, பழனியம்மாள் மொபட்டிலும், தங்கராசு சைக்கிளிலும் கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர். பழனியம்மாளை மொபட்டில் இருந்து கீழே இறக்கிய கருப்புசாமி, சோப்பு வாங்க கடைக்கு சென்றார்.அப்போது தங்கராசு துணி துவைப்பதற்காக வாய்க்காலின் கரையில் இறங்கினார். எதிர்பாராதவிதமாக அவர் கால் இடறி வாய்க்காலுக்குள் விழுந்துவிட்டார். கரையில் நின்றுகொண்டு இருந்த தாய் பழனியம்மாள் மகனை காப்பாற்றுவதற்காக வாய்க்காலில் குதித்தார். அப்போது அவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்த கருப்பசாமி மனைவியும், மகனும் வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்டு இருப்பதை பார்த்து பதறிப்போய் பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்ததும் பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீர் இழுத்து செல்லப்பட்ட தங்கராசுவையும், பழனியம்மாளையும் தேடினார்கள். அப்போது வாய்க்காலில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தங்கராசுவின் உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பழனியம்மாளின் கதி என்ன? என்பது தெரியவில்லை. மீனவர்கள் உதவியுடன் பழனியம்மாளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
On Saturday, September 20, 2014 by farook press in ,    
பெருந்துறை அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

தீ விபத்து

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரம் மலைக்கோவில் எதிரில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 55). அவருடைய மனைவி அங்குலட்சுமி. சண்முகம் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் இருக்கை, டேபிள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார். இவைகளை தனது வீட்டையொட்டி உள்ள ஒரு அறையில் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் சண்முகமும், அங்குலட்சுமியும் தூங்க சென்றுவிட்டனர். 11.30 மணி அளவில் அறை முன்பு போடப்பட்டு இருந்த ஓலைக்கீற்றுகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்த 2 பேரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இந்த தீ மளமளவென அருகில் உள்ள வீட்டுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

ரூ.15 லட்சம் சேதம்

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி பொன்னாமலை தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் வீடு முன்பு சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த நாய் கருகி செத்தது. மேலும் பொருட்கள் வைத்திருக்கும் அறை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை வேன், டேபிள், சேர் மற்றும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், ரூ.1 லட்சம் ஆகியவை தீயில் எரிந்து சேதமானது. இதன் சேத மதிப்பு ரூ.15 லட்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து சண்முகம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தீ விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை தாசில்தார் ஜெகநாதன், சீனாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினர். 

Friday, September 19, 2014

On Friday, September 19, 2014 by farook press in ,    
சித்தோடு ராயபாளையம் கூட்டுறவு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். அவருடைய மனைவி பெரியம்மா (வயது 65). இவரை கடந்த 27–8–2003–ம் அன்று திருவாரூரை சேர்ந்த ஆதி என்கிற அருண்குமார் உள்பட 3 பேர் கொலை செய்தனர். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2004–ம் ஆண்டு ஜாமீனில் அருண்குமார் வெளியே வந்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையில் கோர்ட்டில் ஆஜராகமல் தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அருண்குமாரை சித்தோடு போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டம் தாமரைக்குளம் அருகே உள்ள பெரியகுளம் காலனியில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அருண்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருண்குமார் ஈரோடு 3–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அருண்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Friday, September 19, 2014 by farook press in ,    
ஈரோடு அருகே அனுமதியின்றி இயங்கிய தனியார் ‘சிப்ஸ்’
ஆலைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
சீல் வைப்பு
ஈரோடு அருகே முள்ளாம்பரப்பை அடுத்த அசோகபுரம் பகுதியில் கோவையை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான ‘சிப்ஸ்’
தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலை முறையாக அனுமதியின்றி இயங்கி வருவதாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவுப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாகவும் ஈரோடு மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் அந்த ஆலைக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த ஆலை அனுமதியின்றி இயங்கியது தெரிய வந்தது. இதையொட்டி அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பறிமுதல்
மேலும் ஆலையில் இருந்த சிப்ஸ், முறுக்கு மற்றும் எண்ணை உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி கருணாநிதி கூறும்போது,`` இந்த ஆலையில் பறிமுதல் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் உணவுப்பொருட்களை கோவை உணவு பகுப்பு ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களில் உணவுப்பொருட்களின் பரிசோதனை முடிவுதெரியவரும். தரமற்ற உணவுப்பொருட்களை தயாரித்தது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்`` என்றார்.