Friday, September 05, 2014
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாங்குநேரியில் ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் மடாதிபதியை நெற்றியில் விபூதியுடன் சென்று கமல் சந்தித்தார்.
அந்த கோவிலுக்கு உள்ளே ஆண்கள் செல்லும்போது மேலாடை அணிந்து செல்லக்கூடாது. வேட்டி மட்டும் தான் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் அணிந்து செல்லவும் தடை இருக்கிறது. இது காலங்காலமாக அந்த கோவிலின் மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கமல் அந்த மரபை மீறி மேலாடை அணிந்து சென்றார் என்று நெல்லை மாவட்ட மக்கள் கோவில் நிர்வாகத்தின் மீதும், கமல் மீதும் கடும் கொந்தளிப்பை உண்டாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குதொடரப்போவதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
சரி… அது இருக்கட்டும்… இதுவரை கடவுளே இல்லையென்று சொல்லிவந்த கமலஹாசன், சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களுக்கு அவரே பூஜை போட்டார். பட பூஜை மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டிருப்பார் என அது பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை. தற்பொழுது கமல் நெற்றியில் விபூதியுடனும், கையில் தட்சனையுடனும் கோயில் மடாதிபதியை சந்தித்து அருள்வாக்கு பெற்றதான் காரணம் என்ன.
ஒரு வேலை நாத்திகம் போரடித்ததால், ஆன்மீகத்திற்கு திரும்பிவிட்டாரா? அல்லது தான் ஒரு நாத்திகவாதி என இதுவரை மக்களை ஏமாற்றி வந்துள்ளாரா? கமல்ஹாசனின் உண்மை முகம் எது எனவும் பொதுமக்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மரணம் நோக்கி ஒரு பயணம்- உலகிலேயே இறப்பை கொண்டாடும் நகரம் காசி மட்டுமே..இங்கு தான் மரணம் போற்றப்படுகிறது. ஆஸ்பத்திரிகளில் கூட்டம். ஆல...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 10.2.16 திருச்சி காந்திமார்க்கெட் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பேட்டியளித்த கமலக்கண்ணன் எதிர்கட்சியின் சதி அஇத...
-
திருப்பூர், ஜன. 13: திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுக் கடைகள், மதுக்கூடங்களுக்கு ஜனவரி 16-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத...
-
திருப்பூரில் நடந்த தொழில் மறுமலர்ச்சி கருத்தரங்குக்கு தலைமை தாங்கிய இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவர் ராஜாசண்முகம் பேசி...
-
உலகம் முழுவதும் இணையம் வழியாக நடக்கும் ஒரு மோசமான மோசடிக்கு ஆயிரக்கணக்கான ஆண்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தி...
0 comments:
Post a Comment